காஞ்சிபுரம் நகராட்சி அருகில் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் இறந்தார்.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சூர்யா (23). நகராட்சி அருகே திங்கள்கிழமை நள்ளிரவு சாலையில் நடந்துசென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே சூர்யா உயிரிழந்தார்.
இதுகுறித்து சிவகாஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.