மதுராந்தகம் ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 8-ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலாளர் டி.கே.சீனிவாசன் வரவேற்றார். இயக்குநர்ஆர்.கோபாலன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எஸ். திருமலை ஆண்டறிக்கை வாசித்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் சூசன் ஜெயின் மகளிர் கல்லூரி முதல்வர் பி.பூரணா சிறப்புரையாற்றினார்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 62 மாணவ, மாணவிகள் படிக்க கல்லூரி கட்டணத் தொகை, பல்கலைக்கழகத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.