குரங்கணி காட்டுத் தீயில் இறந்த மென்பொறியாளர் புனிதாவின் சடலத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி மற்றும் அரசியல் கட்சியினர் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலை ராஜீவ் காந்தி அவென்யு பகுதியைச் சேர்ந்த பாலாஜியின் மனைவி புனிதா(25), தனது நண்பர்களுடன் குரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்றிருந்தார்.
இந்நிலையில் வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இறந்த அவரது சடலம் திங்கள்கிழமை இரவு ஸ்ரீபெரும்புதூருக்கு எடுத்து வரப்பட்டு இறுதி சடங்குகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
புனிதாவின் உடலுக்கு ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி, அதிமுக மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஒன்றியச் செயலாளர் எறையூர் முனுசாமி, நகரச் செயலாளர் குமார், திமுக ஒன்றியச் செயலாளர் கோபால் உள்ளிட்ட திமுகவினரும், நகர காங்கிரஸ் பொருப்பாளர் எஸ்.ஏ.அருள்ராஜ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.