செங்கல்பட்டு மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் 3-ஆவது நாளாக குழந்தைகளுக்கு போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து செவ்வாய்க்கிழமை போடப்பட்டது.
செங்கல்பட்டு நகராட்சி, அனுமந்தபுத்தேரி சுகாதார நிலையம், பெரியநத்தம் சுகாதார நிலையம், ஹை ரோடு, வேதாசலம் நகர், அரசு மருத்துவமனை, அழகேச நகர், மேட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடம், திருமண மண்டபம், புதிய பேருந்துநிலையம், பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கடந்த 11-ஆம் தேதி தொடங்கிய இந்த முகாம் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது. இதே போன்று செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடி, மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுகுன்றம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து போடப்பட்டது.