வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம், சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைஆகியவற்றின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் பரனூரில் உள்ள வட்டாரப்

செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம், சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைஆகியவற்றின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் பரனூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டட வளாகத்தில் நடைபெற்றது. 
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் தலைமை வகித்தார். போக்குவரத்து ஆய்வாளர்கள் கருப்பையன், சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கர நேத்ராலயா கண் மருத்துவர்கள் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை செய்து மருந்துகளையும் வழங்கினர். 
முகாமில் அலுவலகப் பணியாளர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், பஸ், லாரி, கார் ஓட்டுநர்கள் ஆகியோர் கண்பரிசோதனை செய்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com