வேளாண் குறை தீர் முகாம் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 16) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு வேளாண்துறை, சார்பு துறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.