மயானப் பாதை அமைத்துத் தர பச்சம்பாக்கம் கிராமத்தினர் கோரிக்கை

மயான பாதை அமைத்துத் தரும்படி பச்சம்பாக்கம் கிராமத்தினர் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மயான பாதை அமைத்துத் தரும்படி பச்சம்பாக்கம் கிராமத்தினர் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது: 
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், பவூஞ்சர் அருகே உள்ள பச்சம்பாக்கம் கிராமத்தில் சுமார் 160 குடும்பங்கள் உள்ளன. கிராமத்துக்கு அருகில் சுடுகாடு உள்ளது. 
இந்த சுடுகாட்டுக்கு செல்வதற்கான பாதையை பல தலைமுறைகளாக பயன்படுத்தி வந்தோம். தற்போது, அந்த வழியை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து வருகிறார். 
மேலும், அந்த வழியில் டிராக்டர் மூலம் பெரிய பாறை கற்கள், முள்களை போட்டு வழி மறித்துள்ளார். இதுதொடர்பாக, ஊர்மக்கள் கேட்டதற்கு, வழிவிட மறுத்து, இந்த பாதை தனது பட்டா இடம் எனவும் கூறி வருகிறார். ஆனால், அவ்வழியாக ஏரிக்குச் செல்லும் நீர்வரத்துக் கால்வாய், குடிநீர் கிணற்றிலிருந்து கிராமத்துக்கு குடிநீர் செல்லும் குழாயும் செல்கிறது.
இதுதொடர்பாக, ஏற்கெனவே பலமுறை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளோம். ஆனால், எவ்வித பயனும் இல்லை. 
போலீஸார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சடலங்களை எடுத்துச் செல்வதற்கு அவதிப்பட்டு வருகிறோம். எனவே, மயான பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைத்துத் தர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com