சாலை விபத்தில் வங்கி ஊழியர் சாவு

சுங்குவார்சத்திரம் அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில், தனியார் வங்கி ஊழியர் உயிரிழந்தார்.

சுங்குவார்சத்திரம் அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில், தனியார் வங்கி ஊழியர் உயிரிழந்தார்.
 சுங்குவார்சத்திரத்தை அடுத்த குன்னம்பகுதியைச் சேர்ந்தவர் சுகன் (22). இவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு பணிமுடிந்து சுகன் தனது இருசக்கர வாகனத்தில் குன்னம் நோக்கி சுங்குவார்சத்திரம் }வாலாஜாபாத் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்த சுகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 விபத்து குறித்து சுங்குவார்ச்ததிரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com