மொபெட்டின் பெட்டியை உடைத்து ரூ. 4 லட்சம் திருட்டு

திருக்கழுகுன்றத்தில் மொபெட்டின் பெட்டியை உடைத்து ரூ. 4 லட்சத்தை மர்ம மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருக்கழுகுன்றத்தில் மொபெட்டின் பெட்டியை உடைத்து ரூ. 4 லட்சத்தை மர்ம மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
 திருக்கழுகுன்றத்தை அடுத்த கருமாரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருலோகம் (55). இவர், கடந்த சில நாள்களுக்கு முன் தனக்குச் சொந்தமான இடத்தை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ. 4 லட்சம் ரொக்கத்தை செலுத்துவதற்காக செவ்வாய்க்கிழமை திருக்கழுகுன்றத்தில் உள்ள வங்கிக்கு தனது மொபெட்டின் பெட்டியில் பணத்தை வைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
 வங்கியில் செலானை பூர்த்தி செய்யத் தெரியாததால், திருக்கழுகுன்றத்தில் உள்ள தனது நண்பரிடம் சென்று பூர்த்தி செய்துகொண்டு, வங்கிக்கு வந்துள்ளார். அப்போது மொபெட்டின் பெட்டியை திறந்து பார்த்தபோது, பெட்டியில் வைத்திருந்த பணம் காணாமல் போனது தெரியவந்தது.
 இதையடுத்து, திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் திருலோகம் அளித்த புகாரின்பேரில், திருக்கழுகுன்றம் போலீஸார் புதன்கிழமை வழக்கு பதிந்து, ரூ. 4 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com