திருப்புலிவனம் அரசுப்பள்ளியில் குழந்தைகள் தின விழா

திருப்புலிவனம் அரசு தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
திருப்புலிவனம் அரசுப்பள்ளியில் குழந்தைகள் தின விழா


திருப்புலிவனம் அரசு தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புலிவனத்தில் உள்ள அரசினர் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவில் குழந்தைகள் கண்காணிப்பக இயக்குனர் ராஜி தலைமை வகித்து, சிறப்புரையாற்றினார். 
பள்ளி தலைமை ஆசிரியை மலர்விழி வரவேற்றார். நிகழ்ச்சியில், மாணவர்களுக்கிடையே பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், பாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
தொடர்ந்து பள்ளி மாணவியர்களுக்கு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிறைவாக, பள்ளி ஆசிரியை சிவகாமி நன்றி கூறினார்.இதில், திரளான பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com