சுங்குவார்சத்திரம் அருகே விபத்து: இருவர் சாவு

சுங்குவார்சத்திரம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மினிவேன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

சுங்குவார்சத்திரம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மினிவேன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
 சுங்குவார்சத்திரம் பகுதியில் இருந்து பிள்ளைச்சத்திரம் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. இதில் சந்தவேலூர் இ.பி. காலனியில் பயணிகளை இறக்குவதற்காக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக ஆட்டோவை அதன் ஓட்டுநர் நிறுத்தினார். அதன் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் தங்கள் வாகனத்தை அந்த ஆட்டோவின் பின்னால் நிறுத்தினர்.
 அப்போது சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி மீன்களை ஏற்றியபடி சென்று கொண்டிருந்த ஒரு மினிவேன் அந்த இருசக்கர வாகனம் மற்றும் ஷேர் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த சந்தவேலூர் இ.பி.காலனி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன்(60), இருசக்கர வாகனத்தில் வந்த சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த வினோத்(28) ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். பைக்கில் வந்த சந்தோஷ் படுகாயடைந்தார்.
 இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் போலீஸார், காயமடைந்த சந்தோஷை சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த கிருஷ்ணன் மற்றும் வினோத் ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com