அண்ணாதுரையின் 110ஆவது பிறந்த நாளையொட்டி அண்ணா திராவிடர் கழகத்தின் சார்பில் சுங்குவார்சத்திரம் பகுதியில் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் 110ஆவது பிறந்த நாளை அண்ணா திராவிடர் கழகத்தினர் சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை கொண்டாடினர். அக்கட்சியின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பி.பி.ஜி.டி.சங்கர் தலைமையில் கட்சியினர் கட்சிக் கொடியேற்றி அண்ணாதுரையின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியதோடு, அன்னதானமும் செய்தனர். இந்த விழாவில் மாவட்டப் பொறுப்பாளர் போந்தூர் மோகன், ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆண்டியப்பன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தன்ராஜ், ஒன்றிய அவைத்தலைவர் ஏசுப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.