நாய்கள் கடித்ததில் புள்ளி மான் சாவு

கும்மிடிப்பூண்டி அருகே தெரு நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது.

கும்மிடிப்பூண்டி அருகே தெரு நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பாலவாக்கம் காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் தேடி  பெண் புள்ளி மான் ஒன்று வியாழக்கிழமை ஊருக்குள் வந்தது.
இந்நிலையில், மானைக் கண்ட தெரு நாய்கள் அதனை விரட்டிக் கடித்தன. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், நாய்களை விரட்டினர். ஆனால், பலத்த காயமடைந்த மான் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாதர்பாக்கம் வனத்துறை அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து, பூவலம்பேடு கால்நடை மருத்துவர்கள் வந்து புள்ளி மானை பிரேத பரிசோதனை செய்து, மானின் சடலத்தை அகற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com