மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் மறியல்

திருவள்ளூர் அருகே மதுக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அருகே மதுக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நாராயணபுரம் அருகே இயங்கி வந்த மதுக் கடை முடப்பட்டது. அந்த கடைக்கு மாற்றாக அருகில் உள்ள வரதாபுரம் கிராமத்தில் புதிய கடையைத் திறக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரதாபுரம், மஞ்சாகுப்பம், நாராயணபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் செவ்வாய்க்கிழமை மாலை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி புகழேந்தி தலைமையில் போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பார்த்திபன், அதற்கு மாற்றாக வேறு இடத்தில் கடை அமைக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
 இதனால் திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com