வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணம் திருட்டு

மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 10 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 10 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அனுப்பம்பட்டு, ராமகிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் (56). இவர் கடந்த 12-ஆம் தேதி அன்று குடும்பத்தினருடன் திருநெல்வேலியில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றார்.
இந்நிலையில், கோவிந்தராஜ் புதன்கிழமை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை, ரூ. 30ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோவிந்தராஜ் மீஞ்சூர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com