விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ.
விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி

திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண நிதியை கோட்டாட்சியர் திவ்ய ஸ்ரீ

திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண நிதியை கோட்டாட்சியர் திவ்ய ஸ்ரீ வழங்கினார்.
திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து விபத்து இழப்பீடாக 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் நிவாரணம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் வட்டத்துக்கு உள்பட்ட சிட்ரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமுதாயத்தினர் 6 பேருக்கு ஜாதி சான்றிதழ்களை கோட்டாட்சியர் வழங்கினார். பின்னர், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த 25 மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com