செல்லியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா தொடக்கம்

திருவள்ளூர் அருகே அமைந்துள்ள மகாசக்தி செல்லியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருவள்ளூர் அருகே அமைந்துள்ள மகாசக்தி செல்லியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
 திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் அமைந்துள்ளது மகாசக்தி செல்லியம்மன் புற்றுக் கோயில். இக்கோயிலில் ஆ டி மாத தொடக்கத்தில் இருந்து முடிவு வரை சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
 இந்நிலையில் இக்கோயிலின் ஆடி மாத திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
செல்லியம்மன் மற்றும் நாகம்மாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்ன தானம், பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
 இதில் திருப்பாச்சூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான
பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com