திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, அடிப்படை திறன் வளர்த்தல் குறித்த 5 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.
அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு உதவித் திட்ட அலுவலர் நந்த
குமார் தலைமை வகித்தார். இதில், தினமும் ஒரு பாடம் என தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு அடிப்படை திறன் வளர்த்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
முகாமில், ராமச்சந்திரன், முத்து, கந்தசாமி, மிகாவேல், மீனாட்சி, ரஹமத்துன்நிசா உள்ளிட்ட பயிற்றுநர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.