சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

சென்னை மாதவரம் போக்குவரத்து காவல் துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

சென்னை மாதவரம் போக்குவரத்து காவல் துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சந்திரமெளலி தலைமை வகித்தார். மாதவரம் சரக போக்குவரத்து உதவி ஆணையர் வீரபத்திரன் பங்கேற்று, சாலை விதிகள், தலைக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கினார்.
மேலும், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்.
மாதவரம், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவி ஆய்வாளர்கள் விநாயகமூர்த்தி, சதீஷ்குமார், நரேஷ்குமார், இக்பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com