10-ஆம் வகுப்பு தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 91.65 சதவீதம் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 91.65 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 91.65 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் 612 பள்ளிகளில் இருந்து 48,865 மாணவர்கள் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில், 44,785 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 91.65.
மாவட்டத்தில் 219 அரசுப் பள்ளிகளிலிருந்து 17,774 மாணவர்கள் தேர்வெழுதினர். இவர்களில் 15,031 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 84.57 தேர்ச்சி சதவீதமாகும்.
309 மெட்ரிக். பள்ளிகளில் தேர்வு எழுதிய 22,330 மாணவர்களில் 21,843 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.82 சதவீதமாகும். 14 நகராட்சிப் பள்ளிகளில் தேர்வெழுதிய 651 பேரில் 548 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 84.18 சதவீதமாகும். ஒரு பார்வையற்றோர் பள்ளியில் 22 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தேர்வெழுதிய 576 மாணவர்களில் 491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 85.24 சதவீதமாகும். 4 காது கேளாதோர் பள்ளியில் தேர்வெழுதிய 18 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 26 நிதியுதவி பெறும் பள்ளிகளில் தேர்வெழுதிய 5,126 மாணவர்களில் 4,659 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 90.89 சதவீத தேர்ச்சியாகும்.
27 சுயநிதிப் பள்ளிகளில் 2,368 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்களில் 2,177 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.93 சதவீத தேர்ச்சியாகும்.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டம் 29-ஆவது இடம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com