சிக்னல் கோளாறு: புறநகர் மின்சார ரயில்கள் 2 மணி நேரம் தாமதம்

அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரயில்கள்
சிக்னல் பழுதடைந்ததால், வேப்பம்பட்டு அருகே அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ரயில்கள்.
சிக்னல் பழுதடைந்ததால், வேப்பம்பட்டு அருகே அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ரயில்கள்.

அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரயில்கள்
2 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.
அரக்கோணத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் வேப்பம்பட்டு-திருநின்றவூர் இடையே உள்ள ஒரு சிக்னல் கம்பத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால், மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று, சிக்னலில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர், சிக்னல் செயல்பட தொடங்கியது. இதைத்தொடர்ந்து, மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.
இதனால் அரக்கோணம் மார்க்கத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வேலைக்காகச் சென்ற பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.

  திருவள்ளூரில் காத்திருந்த ரயில் பயணிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com