பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவி சுஜாஷாமினி 498 மதிப்பெண்களும், ஜெயந்தி 496 மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தைப் பெற்றனர். அதேபோல் கிருத்திகா, லோகிதா, விஜயலட்சுமி, மாணவர் குஷென் ஆகிய 4 பேர் தலா 495 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை வேலம்மாள் கல்விக் குழும இயக்குநர் சசிக்குமார், பள்ளி முதல்வர் சாந்தி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.