அம்பத்தூரில் பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி உமா (42). திருவள்ளூரிலுள்ள கால்நடை மருத்துவமனையில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
வெள்ளிக்கிழமை மாலை பணிமுடிந்து அம்பத்தூர் வந்த உமா, செங்குன்றம் சாலையிலுள்ள பல்பொருள் அங்காடியில் மளிகை சாமான்கள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை இருசக்கர வாகனத்தில் 2 பேர் பின்தொடர்ந்து வந்தனர். அவர்களில் ஒருவன் வாகனத்திலிருந்து இறங்கி வந்து உமா அணிந்திருந்த 5 புவன் தாலி செயினை பறித்துக்கொண்டு தயாராக நின்றிருந்த வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றான்.
இதுகுறித்த புகாரின்பேரில் அம்பத்தூர் போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.