டெங்கு காய்ச்சலால் 8 வயது சிறுவன் சாவு

திருவள்ளூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

திருவள்ளூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
 திருவள்ளூர் அருகே உள்ள கீழ்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுபதி. இவரது மகன் ரோஹிந்த குமார் (8) இப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த 29-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மணவாளநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். பின்னர் 2 நாள்களில் மீண்டும் காய்ச்சல் ஏற்படவே அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காய்ச்சல் அதிகமாகவே திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கடந்த 6-ஆம் தேதி சேர்த்தனர். அப்போது, சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் 7-ஆம் தேதி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரோஹிந்த குமார்அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை ரோஹிந்தகுமார் உயிரிழந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com