மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வரும் டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்ளலாம்.
பொன்னேரி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் பொன்னேரியில் 9.11.17 முதல் 18.11.17 வரை தேசிய சட்டப்பணி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
இந்நிகழ்ச்சிக்கான துவக்க விழா பொன்னேரி குற்றவியல் நீதிமன்றம் எண் ஒன்றின் முன் வியாழக்கிழமை நடைபெற்றது. பொன்னேரி சார்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.ராஜ்குமார், இந்நிகழ்ச்சியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அப்போது மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்.உமா உடனிருந்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.