ரூ. 7.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு

வீரானத்தூர் கிராமத்தில் ரூ. 7.80 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட ரேஷன் கடையை எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

வீரானத்தூர் கிராமத்தில் ரூ. 7.80 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட ரேஷன் கடையை எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
 ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட வீரானத்தூர் ஊராட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7.80 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டப்பட்டது.
 கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இதில், திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் கலந்து கொண்டு ரேஷன் கடையத் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை, அரிசி, பருப்பு ஆகியவற்றை விநியோகம் செய்து விற்பனையைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.விஜயகுமாரி, ஆர்.கே.பேட்டை முன்னாள் ஒன்றிய தலைவர்.கே.ஜெயராமன், ஒன்றியப் பொறியாளர் லோகநாதன், கூட்டுறவு சங்கச் செயலாளர் வி. கமலக்கண்ணன், விற்பனையாளர் ஜெ.சுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com