கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கண்ணூர் ஏரிப் பகுதியை எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் திங்கள்கிழமை பார்வையிட்டார். அப்போது, அப்பகுதி மக்கள் அவரிடம், மதகுகளைச் சீரமைக்கவும், ஏரிக்கரைகளை உயர்த்தவும் கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, கொண்டாஞ்சேரியில் ஏரிக்குச் செல்லும் வரத்துக் கால்வாயில் உடைப்பையும் பார்வையிட்டார். பின்னர் கரைப்பகுதிகளைப் பலப்படுத்தவும், பழுதான நிலையில் உள்ள மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறுவதை சீர்செய்யவும் திட்ட மதிப்பீடு தயார் செய்யும்படி அதிகாரிகளை வலியுறுத்தினார்.
அப்போது, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ், ஒன்றியப் பொருளாளர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.