விஷக் காய்ச்சல்: நரிக்குறவர் சாவு

அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயலில் விஷக்காய்ச்சலால் நரிக்குறவ இளைஞர் இறந்தார்.

அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயலில் விஷக்காய்ச்சலால் நரிக்குறவ இளைஞர் இறந்தார்.
 திருமுல்லைவாயல், சி.டி.எச். சாலை ஜெயா நகரில் நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். இவர்களில் தில்லை என்பவரின் மகன் நடராஜ் (15 ). இவருக்கு கடந்த 4 நாள்களாக காய்ச்சல் இருந்து வந்தது. அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.
 அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், இது விஷக்காய்ச்சல் என்றும், முறையான சிகிச்சை இல்லாததால் வரும் வழியிலேயே அவர் இறந்து போனதாகவும் கூறினார்கள்.
 இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com