பட்டாபிராம் சரக உதவி காவல் ஆணையரை நியமிக்கக் கோரிக்கை

கடந்த 2 மாதங்களாக காலியாக உள்ள பட்டாபிராம் சரக உதவி காவல் ஆணையர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த 2 மாதங்களாக காலியாக உள்ள பட்டாபிராம் சரக உதவி காவல் ஆணையர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அம்பத்தூரை அடுத்த பட்டாபிராம் சரக காவல் உதவி ஆணையராக இருந்த பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் பணி ஓய்வுபெற்றார். இதையடுத்து கடந்த 2 மாதமாக இப்பதவியில் புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை. 
இதையடுத்து, ஆவடி சரக உதவி ஆணையர் நந்தகுமார், பட்டாபிராம் சரகத்தையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் பணிச்சுமை அதிகரித்து உள்ளதாகவும், பட்டாபிராம் பகுதி மக்கள் தங்களது குறைகள், கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க ஆவடிக்கு சென்று வர வேண்டியுள்ளது.
எனவே, பட்டாபிராம் சரக உதவி ஆணையரை விரைவில் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com