பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

கொரட்டூரில் பெண்ணிடம் ஆறு பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கொரட்டூரில் பெண்ணிடம் ஆறு பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கொரட்டூர் காவல் எல்லைக்கு உள்பட்ட அட்சயா காலனி 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுகன்யா (23). இவர் வியாழக்கிழமை மாலை அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலையில் உள்ள பள்ளியில் பயிலும் தனது குழந்தைகளை அழைத்துவரச் சென்றார். அப்போது, சுகன்யாவை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் கிடந்த ஆறு பவுன் தாலிச்செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். 
இதுகுறித்து கொரட்டூர் காவல் ஆய்வாளர் ராஜகுமார் வழக்குப்பதிந்து, மர்ம நபரை தேடி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com