திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே பாஜக இளைஞரணியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் நவயோதயா பள்ளிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆர்யா சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கரு.நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை உடனே திறக்க வலியுறுத்தியும், கல்விக் கொள்கையில் திமுகவின் போக்கை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் பாலாஜி, கருணாகரன், பொதுச் செயலாளர் ராஜ்குமார், திருவள்ளூர் நகரத் தலைவர் ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.