காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

கும்மிடிப்பூண்டியில் நகர காங்கிரஸ் கட்சி செயல்வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் நகர காங்கிரஸ் கட்சி செயல்வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி கிழக்கு வட்டார தலைவர் ஏ.மதன்மோகன் தலைமை வகித்தார். நகர தலைவர் குணசேகர் வரவேற்றார். மேற்கு வட்டார தலைவர் எஸ்.எஸ்.பெரியசாமி,  தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்  பென்னீஸ், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம்,  மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.சம்பத், மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொதுச் செயலாளர் சிவாரெட்டி, மாவட்டச் செயலாளர் பரசுராமன் ஆகியோர் பங்கேற்று கட்சி வளர்ச்சி குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் பேசினார்கள்.
தொடர்ந்து, கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பாராட்டு  தெரிவித்தும், கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்டெடுப்பது குறித்தும்,  வரும் மே 21-இல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி புதுவாயல், சுண்ணாம்புகுளம், கீழ்முதலம்பேடு, புதுகும்மிடிப்பூண்டி, எளாவூர் ஆகிய 5 இடங்களில் கல்வெட்டுகள் அமைப்பது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இளைஞர் அணி நிர்வாகி பிரேம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com