சுகாதாரப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கொசு

கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கொசு ஒழிப்பு சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.சந்தோஷ்மேரி தலைமை வகித்தார். கும்மிடிப்பூண்டி ஒன்றியத் தலைவர் ஏ.வி.பாலாஜி, நிர்வாகிகள் சீனிவாசன், ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கி.பொன்னிவளவன் சிறப்புரை வழங்கினார். 
இதில், கொசு ஒழிப்பு பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும், அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
நிகழ்வில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் கமலக்கண்ணன், மாநில தலைமை நிலையச் செயலாளர் கோ.முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.வெங்கடேசன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com