தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள சுத்தம் மற்றும் தூய்மை அமைப்பு சார்பில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
கவரப்பேட்டையில் உள்ள பரமேஷ்வரி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு, அமைப்பின் தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். செயலாளர் பர்வீன், பொருளாளர் பாலாஜி, சட்ட ஆலோசகர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து 10 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று ரத்தம் சேகரித்தனர்.
முகாமில் கும்மிடிப்பூண்டி கிராம நிர்வாக அலுவலர்கள் நல்லீஸ்வரன், பிரபு, ஜோதி உள்ளிட்ட 70 பேர் ரத்த தானம் அளித்தனர்.