கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் திமுக மாணவர் அணியினரின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பாக நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமை வகித்தார். மாணவர் அணி அமைப்பாளர் வெற்றி ராஜேஷ் வரவேற்றார்.
மாவட்ட துணைச் செயலாளர் கதிரவன், துணை அமைப்பாளர்கள் வெங்கல் டேவிட், ரஜினி, தமிழ் அழகன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் அ. அக்கீம் பொன்னேரி தெற்கு, மேற்கு ஒன்றிய அமைப்பாளர்கள் பிரபு, விக்னேஷ் உதயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வரும் மார்ச் 1 -இல் இளைஞர் எழுச்சி நாளை அனைத்து கிராமங்களிலும் நல உதவிகள் வழங்கிக் கொண்டாட வேண்டும் என்றும், மார்ச் 24, 25 -இல் ஈரோட்டில் நடைபெறும் திமுக மண்டல மாநாட்டில் திரளானோர் பங்கேற்க வேண்டும் என்றும், கல்லூரிகளில் மாணவர் அணி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
கூட்டத்தில் ராஜேஷ், அஸார், சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.