டாஸ்மாக் கடையில் திருட முயற்சி 

சோழவரம் அருகே, டாஸ்மாக் கடையில் திருட முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.  

சோழவரம் அருகே, டாஸ்மாக் கடையில் திருட முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.   விஜயநல்லூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வியாழக்கிழமை ஊழியர்கள் கடையைப் பூட்டி விட்டுச் சென்றனர். வெள்ளிக்கிழமை கடையைத் திறக்க வந்தபோது, கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்தது. உள் கதவு பூட்டை உடைக்க முடியாததால் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள், ரொக்கப் பணம் ஆகியன தப்பியது. புகாரின் பேரில், சோழவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com