விபத்தில் காவலர் சாவு

கும்மிடிப்பூண்டி அருகே அடையளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறப்பு காவல் படை வீரர் உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி அருகே அடையளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறப்பு காவல் படை வீரர் உயிரிழந்தார்.
பெரியபாளையம் அருகே உள்ள பெரிய கிளாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (25). இவர், ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படை 3-ஆவது பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். புதன்கிழமை இரவு இவர் ஜனப்பன் சத்திரத்துக்கு சென்றுவிட்டு, கிளாம்பாக்கத்துக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார்.
தானாகுளம்-பெரியபாளையம் சென்னை நெடுஞ்சாலையில் வந்த போது, பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விக்னேஷ் நிகழ்விடத்திலேயே இறந்தார். 
இதுகுறித்து பெரியபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com