கும்மிடிப்பூண்டி அருகே அடையளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறப்பு காவல் படை வீரர் உயிரிழந்தார்.
பெரியபாளையம் அருகே உள்ள பெரிய கிளாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (25). இவர், ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படை 3-ஆவது பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். புதன்கிழமை இரவு இவர் ஜனப்பன் சத்திரத்துக்கு சென்றுவிட்டு, கிளாம்பாக்கத்துக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார்.
தானாகுளம்-பெரியபாளையம் சென்னை நெடுஞ்சாலையில் வந்த போது, பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விக்னேஷ் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து பெரியபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.