கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

கும்மிடிப்பூண்டி அருகே, கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே, கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த துராப்பள்ளம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின்  பூட்டை  உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.3 ஆயிரத்தையும், பூஜைக்குரிய பித்தளை பொருள்கள், குத்துவிளக்குகள் போன்றவற்றையும் வியாழக்கிழமை திருடிச்சென்றதாகக் கூறப்படுகிறது. 
இதுகுறித்த புகாரின் பேரில், ஆரம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com