விவேகானந்தர் ஜயந்தியை யொட்டி நடைபெற்ற திறனறிதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு திறனறிதல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதில் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
சிறப்பிடம் பெற்ற இம் மாணவர்களுக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. டி.ஜெ.எஸ். கல்விக் குழுமத் தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குனர் டி.டி.தினேஷ், முதல்வர் பிச்சைமணி, நிர்வாக அலுவலர் பாபு முன்னிலை வகித்தனர்.
கல்லூரி சார்பில் சான்றிதழ் மற்றும் பரிசுகளை டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்.