கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லவாடா கிராமத்தில் வருவாய்த் துறையினரின் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் தனி வட்டாட்சியர் லதா, வருவாய் ஆய்வாளர் வைலட் உள்ளிட்ட வருவாய்த் துறையினரிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இதில் பெறப்பட்ட 43 மனுக்களில் அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின் 10 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு உரிய ஆணைகளை வட்டாட்சியர் வழங்கினார்.