பழவேற்காட்டில் சுற்றுலாத் துறை சார்பில் 2 நாள் பொங்கல் கலை நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
நிகழ்ச்சியை ஆட்சியர் சுந்தரவல்லி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி, வட்டாட்சியர் சுமதி ஆகியோர் முன்னிலை வதித்தனர். மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் ஜான்பிரிட்டோ வரவேற்றார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் வைத்தல், நாகசுர கச்சேரி, பரதநாட்டியம், கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 2-ஆவது நாளான புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல், நடனம், சிலம்பம், யோகா, கோலாட்டம் ஆகியவை நடைபெற்றன. நிறைவு விழாவில் பொன்னேரி எம்எல்ஏ பலராமன், கிராமியக் கலைஞர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.