மின்சாதனப் பொருள்கள் பழுதுநீக்கும் கிடங்கில் திடீர் தீவிபத்து

திருத்தணியில் மின்சாதனப் பொருள்கள் பழுதுபார்க்கும் கிடங்கில் திடீரென்று தீவிபத்து ஏற்ப்பட்டதில், மின்சாதன உதிரி பாகங்கள் எரிந்து நாசமாகின.

திருத்தணியில் மின்சாதனப் பொருள்கள் பழுதுபார்க்கும் கிடங்கில் திடீரென்று தீவிபத்து ஏற்ப்பட்டதில், மின்சாதன உதிரி பாகங்கள் எரிந்து நாசமாகின.
திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் வசித்து வருபவர் கிரிராஜ்(50). அவருக்குச் சொந்தமாக திருத்தணி - சென்னை பைபாஸ் சாலையில் உள்ள மின்சாதனப் பொருள் பழுதுநீக்கும் கிடங்கில் திங்கள்கிழமை மதியம் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டு கிடங்கு முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் தீ 
விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கிடங்கில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான உதிரி பாகங்கள் எரிந்து நாசமாகின. இத்தீவிபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com