வழக்குரைஞர்கள் இடையே கிரிக்கெட் போட்டி: நீதிபதி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

வழக்குரைஞர்களின் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி
வழக்குரைஞர்கள் இடையே கிரிக்கெட் போட்டி: நீதிபதி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

வழக்குரைஞர்களின் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி ஊத்துக்கோட்டை அரசினர் மேல் நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 
வழக்குரைஞர்கள் இடையை நல்லுறவை வளர்க்கும் வகையில் ஊத்துக்கோட்டையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அடங்கிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 
10 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிகளுக்கு ஊத்துக்கோட்டை வழக்குரைஞர் சங்கத் தலைவர் வேல்முருகள் தலைமை வகித்தார். ஊத்துக்கோட்டையில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக நிகழ்வில் கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியைத் தொடங்கி வைத்தார்.
இந்தப் போட்டிகளில் சென்னை, சைதாப்பேட்டை, ஆலந்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பூந்தமல்லி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், திருத்தணி பகுதிகளை சேர்ந்த 28 வழக்கறிஞர் அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வரும் 22ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளதாக போட்டி அமைப்பாளரான வழக்குரைஞர் வேல்முருகன் தெரிவித்தார்.
இந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வழக்குரைஞர்கள் பார்த்திபன், பி.எம்.சாமி, வெஸ்லி, ராஜசேகரன், செஞ்சிநாதன், வெற்றித்தமிழன், சீனிவாசன், பாலசுப்பிரமணியகுமார், பொன்னுசாமி, முனுசாமி உள்ளிட்ட வழக்குரைஞர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com