பொன்னேரியில் இன்று துணை முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் 

பொன்னேரியில் ஹரிஹரன் கடை வீதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் அண்ணா பிறந்த நாள் விழா

பொன்னேரியில் ஹரிஹரன் கடை வீதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெறுகிறது. பொன்னேரியில் திருவள்ளூர் மேற்கு, கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார். 
பொன்னேரியில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் ஹரிஹரன் கடை வீதி அமைந்துள்ளது. இந்த சாலையில் தனியார் பள்ளிக்கூடம், 200-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. மேலும் 100-க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள் உள்ளன. 
பாதை முழுவதும் மறித்து மேடை அமைப்பு...: துணை முதல்வர் பங்கேற்கும் கூட்டத்துக்காக இந்த சாலையில், பேருந்து மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத வகையில் கடந்த 12-ம் தேதி பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. இதன் காரணமாக, விநாயகர் சதுர்த்தியன்று ஹரிஹரன் கடை வீதியில் இரண்டு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
பொதுக்கூட்டங்களை மாற்று இடத்தில் நடத்த பொதுமக்கள் கோரிக்கை...: இந்நிலையில், இது போன்று அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரளும் வகையில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களை,  அரசியல் கட்சி நிர்வாகிகள்,  பொதுமக்களுக்கு இடையூறு ஏதும் இல்லாத வகையில் தாங்களாகவே முன்வந்து  மாற்று இடத்தில் நடத்த வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com