அண்ணா பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110}ஆவது பிறந்த நாளையொட்டி, திருத்தணி தொகுதி

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110}ஆவது பிறந்த நாளையொட்டி, திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் பகுதிகளில் அண்ணாவின் உருவப் படத்துக்கு எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன், திருத்தணி முன்னாள் நகர்மன்றத் தலைவர் டி. சௌந்தர்ராஜன், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குப்புசாமி, ஆர்.கே.பேட்டை ஒன்றிய பேரவை செயலாளர் கே.ஜெயராமன், வீட்டு வசதி கூட்டுறவு சங்க துணைத் தலைவர் எம்.எம்.கந்தசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு ஜெ.பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர், செப். 15: முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110}ஆவது பிறந்த நாளையொட்டி, திருவள்ளூரில் அவரது சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சனிக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
இதையொட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர் தி.ராசகுமார் தலைமையில், திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
உடன், நகரச் செயலாளர் முத்தமிழன், தொகுதிச் செயலாளர் யோகா, வரதாபுரம் உ.கோதண்டம், விவேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com