ஆசிரியையிடம் 7 சவரன் வழிப்பறி

திருவள்ளூர் அருகே நடந்து சென்ற ஆசிரியயையிடமிருந்து 7 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


திருவள்ளூர் அருகே நடந்து சென்ற ஆசிரியயையிடமிருந்து 7 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே கந்தன்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த தனசேகரின் மனைவி உமாமகேஸ்வரி (46). இவர், வேப்பம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை மாலை பணிமுடிந்து பேருந்து மூலம் கந்தன்கொள்ளைக்கு வந்து இறங்கினார். பின்னர், அங்கிருந்து
சந்தனராஜ் நகர் சாலையில் நடந்து சென்ற
போது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர், திடீரென உமாமகேஸ்வரியை வழிமறித்து, அவரது கழுத்தில் இருந்த 7 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் உமா மகேஸ்வரி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com