கோளூர் கிராமத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் அமைக்கப்பட்ட பல்பொருள் அங்காடியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
பொன்னேரி வட்டத்தில் உள்ள கோளூர் கிராமத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் அமைக்கப்பட்ட பல்பொருள் அங்காடி திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பல்பொருள் அங்காடியைத் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.