போளூரில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பாஜக மாவட்டபொதுச் செயலர் என்.வெங்கடேசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன்சம்பத் கலந்து கொண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து பேசினார்.
இதில், பாஜக நகரத் தலைவர் ரமேஷ், நகரச் செயலர் குலசேகரன், பெருளாளர் கனகவேல், மாவட்ட வர்த்தக அணிச் செயலர் கோபிநாத் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.