திருவண்ணாமலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார்.
கீழ்பென்னாத்தூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் தாயம்மாள் (61). இவர், கீழ்பென்னாத்தூரை அடுத்த டி.கல்லேரி கிராமத்தில் உள்ள பேத்தி ரோஜா வீட்டுக்குச் சென்றார். தாயம்மாள் வியாழக்கிழமை மாலை டி.கல்லேரி பகுதியில் உள்ள கடைக்குச் சென்றார்.
அங்குள்ள சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தாயம்மாள், அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து, வெறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.