செய்யாறை அடுத்த கூழமந்தல் நட்சத்திர விநாயகர் கோயிலில் மஹா சங்கடஹர சதுர்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் கூழமந்தல் கிராம ஏரிக்கரைப் பகுதியில் 27 நட்சத்திர அதிதேவதைகளும், சனி, ராகு, கேது பகவான்களுக்கும் நடுநாயகனாக அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயிலில் மஹா சங்கட ஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.
முன்னதாக 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும், ராகு, கேது, சனி பகவான்களுக்கும் அபிஷேகம், அலங்காரம், மகாதீபாதாரனை நடைபெற்றன. இதையடுத்து, விநாயகருக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விநாயகரை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.